பெற்றவர்களுக்கு சுமையாக இளைஞர்கள் இருக்கக் கூடாது. சுமை தாங்கியாய் இருக்க வேண்டும். படிப்பை முடித்ததும், கிடைத்த வேலைக்கு இளைஞர்கள் செல்ல வேண்டும். படிக்கும் காலத்தில் பெற்றோருக்கு பணத்தட்டுப்பாடு இருந்தால், பகுதி நேரப் பணிக்குச் சென்று கல்விச்செலவை பார்த்துக் கொள்ள வேண்டும்.
உழைப்பு பற்றிச் சொல்லும் போது, எந்த மனிதனும் தனது கைகளால் உழைத்து உண்ணும் உணவே உயர்வானது. ஒருவன் தன் கையால் உழைப்பது என்பது மோசடியும், பொய்யும் கலக்காத வியாபாரத்துக்கு சமம்”. ஒவ்வொரு இளைஞனும் பெற்றோரின் பாரத்தை தாங்கும் வகையில் உழைக்க வேண்டும்.