சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2019 05:11
கடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால் நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். மேலும் செவ்வாய், குரு, ராகு மாதம் முழுவதும் நன்மை தருவர். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார வளம் பெருகும். சுக்கிரனின் பலத்தால் சமூக மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் நெருக்கம் ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். நவ.22 க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். பொன்,பொருள் சேரும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். டிச.2க்கு பிறகு தம்பதியிடையே அன்பு மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பெண்கள் முன்னேற்ற பலன் கிடைக்கப் பெறுவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். கேதுவால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
சிறப்பான பலன்கள்:
தொழிலதிபர்கள் வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடையிடுவர். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். வியாபாரத்தில் வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.2க்குப் பிறகு நற்பலன் காணலாம். வேலைப்பளு குறையும். ஐ.டி., துறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். மருத்துவர்களுக்கு திறமை பளிச்சிடும். அதற்கேற்ப வருமானம் வரும். வக்கீல்கள் டிச.2 க்குப் பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆசிரியர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்ற சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய வீடு,மனை, வாகனம் வாங்க அனுகூலமான காலம். கலைஞர்கள் புகழோடும், பாராட்டோடும் திகழ்வர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவசாயிகள் புதிய தொழில் நுட்பம் மூலம் அதிகப்படியான மகசூல் காண்பர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. புதிய சொத்து வாங்கலாம். பக்கத்து நிலத்துக்காரர் உதவிகரமாக இருப்பர். பண்ணை தொழில் ஆடுகள் வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் பெறலாம். டிச.2க்குப் பிறகு கால்நடை செல்வம் பெருகும். போதிய வருமானம் கிடைக்கும். பள்ளி மாணவர்கள் டிச.2 க்குப் பிறகு கல்வி வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோனை தக்க சமயத்தில் கிடைக்கும். கல்லூரி மாணவர்கள் சிறப்பான பலன் காண்பர். போட்டியில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயனுள்ளதாக அமையும்.
சுமாரான பலன்கள்:
தொழிலதிபர்கள் அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். வியாபாரிகள், பெண்கள் வகையில் தொல்லைக்கு ஆளாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் உருவாகலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அரசு வகையில் அனுகூலம் இல்லை. வக்கீல்கள் சக வக்கீல்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர். பொறுமையுடன் விட்டுக் கொடுக்கவும்.
* நல்ல நாள்: நவ.17, 20,21,24,25, டிச.1,2, 3,4,5,11,12,13,14 * கவன நாள்: டிச.6,7 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண் : 5,7 * நிறம்: வெள்ளை, சிவப்பு