Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பாபிஷேகம் நிகழ்வுகளில் கருட ... பார்பாரிகாவின் தலை ...
முதல் பக்கம் » துளிகள்
யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்?
எழுத்தின் அளவு:
யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்?

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
06:01

உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாக்கும் வல்லமையுடன் கூடியதாக இருக்கிறது. இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு. யானை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நாம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. காட்டை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உண்டு. ஆம் ஒவ்வொரு நாளும் தன் உணவைத் தேடி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய யானைகள், வழியில் கிடைக்கும் உண்ணத்தக்க மரம், செடி, கொடி, காய், பழங்கள் என அனைத்தையும் உண்கின்றன.

உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாக்கும் வல்லமையுடன் கூடியதாக இருக்கிறது. அதனால் யானைகள் பயணம் செய்யக்கூடிய தூரம் வரை சில நாட்களில் அதன் எச்சத்திலிருந்து பல புதிய மரம், செடி, கொடிகள் என பல தாவரங்களை உருவாகின்றன. இது காடுகளை உருவாக்க முக்கிய காரணமாக அமைகின்றன. தினமும் மூலிகை தாவரங்களை உண்ணக்கூடிய பெரிய மிருகங்களில் மிகவும் பலனைத் தரக்கூடிய விலங்கு யானை. இது காட்டு விலங்காக இருந்தாலும் அதை பழக்கப்படுத்தினால் மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகக்கூடியது. மேலும் மிகவும் தெய்வீக அம்சங்கள் நிறைந்தது.

பல அதிசயத்தக்க விஷயங்கள் அடங்கியுள்ள யானை ஒரே நேரத்தில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு. மனிதர்கள் கூட 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு நாசித்துவாரத்திலிருந்து, மற்றொரு நாசித் துவாரத்திற்குச் சுவாசம் மாறிக் கொண்டே இருக்கும். சுவாசத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது முறைப்படுத்தக்கூடிய ஆன்மிக பயிற்சிக்கு சரகலை என்று பெயர். இந்த ஆன்மிக சுவாசப் பயிற்சியை முன்னேற்றக்கூடிய விஷயங்களுள் ஒன்று தான் பிராணாயாமம், வாசியோகம் போன்ற யோகாசன பயிற்சிகளாகும். யோகாசனத்தில் மிகவும் பயிற்சி பெற்றவர்கள், அதிலும் வாசியோகம், பிராணாயாமத்தில் அதிக பயிற்சி எடுத்து, குறிப்பிட்ட மேல் நிலையை அடைந்தவர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அல்லது எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றனர். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர். அப்படிப்பட்ட சுழுமுனை வாசி யோகம் உள்ள யானைகள் அதன் தும்பிக்கையை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நாம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இப்படிப்பட்ட தெய்வீகத்தைப் பொருந்திய யானைகளிடம் ஆசி பெறுவதால் நமக்கும் தெய்வீக அருள் கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar