Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ... எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளாங்குடி செல்லியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
விளாங்குடி செல்லியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

24 மார்
2023
05:03

தஞ்சாவூர்:  திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில், வடிவமைக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த  விளாங்குடி கிராமத்தில் செல்லியம்மன்  கோவிலில் நுாறு ஆண்டுகளுக்கு முன்பாக தேரோட்டம் நடைபெற்றது. பின்னர், தேர் சிதலமடைந்து  போனதனால் திருத்தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து ஊர் பொதுமக்கள், பக்தர்கள், உபயதாரர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 11அடி உயரம், 11.5 அடி அகலம் கொண்ட புதிய தேர் செய்வதாக திட்டமிட்டு அவற்றை செய்து முடித்து, தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, கோவிலில்  விக்னேஸ்வர பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாரதனை, கடம் புறப்பாடு நடைபெற்று, மங்கள வாத்தியத்துடன் உலா வந்து திருத்தேருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை  காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹிந்து அறநிலைத்துறை தஞ்சாவூர் மண்டல இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி பொறியாளர் கருணாகரன், ஒன்றிய பெருந்தலைவர் அரசபகரன், பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன், திமுக ஒன்றியச் செயலாளர் சிவசங்கரன், அறநிலையத்துறை செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் ஜனனி ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக தேர் வெள்ளோட்டம் நடைபெற்று முடிந்தவுடன் மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளுக்கு புனித நீர் அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar