காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் ; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2026 05:03
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க நகர வீதிகளில் தேர் பவனி வந்தது. தேரின் நடுவே உள்புறத்தில் உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவானது கடந்த மாதம் 23-02-2026 அன்று கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து அன்ன வாகனம் | சிம்ம வாகனம் | அனுமந்த வாகனம் | கருட சேவை | ஸ்ரீ பெட்டத்தம்மன் அழைப்பு, யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடைபெற்றது. 03.03.2016 செவ்வாய்க்கிழமை அன்று பரவேட்டை, தெப்போற்சவம் சந்தான பூஜை,வசந்த விழா ஆகியோற்றுடன் வரும் 06-03.2026 அன்புடன் விழா நிறைவடையும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேரோட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், உதகை, அவிநாசி, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.