ஏரிவாய்: ஏரிவாய் அழகிய மணவாள பெருமாள் கோவிலில், நேற்று நடந்த லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகத்தில், அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ – மாணவியர் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டி, நேற்று காலை 10:00 மணி க்கு லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது.
பூஜையில் தங்களது பெற்றோருடன் பங்கேற்ற திரளான மாணவ – மாணவியருக்கு, சுவாமி பாதத்தில் வைத்து பூஜிக்கப் பட்ட பேனா, பென்சில், மணவாள பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர் படம், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன.