சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த திருக்கூடலையாற்றுாரில் ஞானசக்தி, பராசக்தி சமேத நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் மாசிமக உற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா, சிறப்பு பூஜைகள் நடந்தது. 24ம் தேதி சுந்தரருக்கு இறைவன் வழிகாட்டி நர்த்தனவல்லபேஸ்வரர், பராசக்தி நேரடி காட்சி கொடுத்த ஐதீக நிகழ்வு நடந்தது.
27ம் தேதி திருமுறை உற்சவம், இரவு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. நேற்று காலை நர்த்தனவல்லபேஸ்வரர், பராசக்தி, ஞானசக்தி, விநாயகர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து உற்சவர்கள் நர்த்தனவல்லபேஸ்வரர், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் செய்து தேரில் எழுந்தருளச் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் அருணாச்சலா அறக்கட்டளையினர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
18 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்த் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.