நாட்டரசன்கோட்டையில் மாசி தேரோட்டம் ; பக்தர்கள் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2026 05:03
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோயிலில் பிப்., 22 அன்று கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்கியது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. இரவில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் 7 ம் நாளான பிப்., 27 அன்று திருக்கல்யாணம் நடந்தது. பத்தாம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று காலை 9:40 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து, நேற்று காலை 10:35 மணிக்கு நிலையை அடைந்தது. பக்தர்கள் தேர் தடத்தில் சிதறு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 10:40 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், யாகசாலை தீபாராதனை, கலச அபிேஷகம் நடக்கிறது. இரவு 7:15 மணிக்கு தீபாராதனை, கொடியிறக்கம், உற்சவ சாந்தி தீபாராதனையுடன் மாசி மக திருவிழா நிறைவு பெறுகிறது.