Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் புராணம் பகுதி-9 விநாயகர் புராணம் பகுதி-11 விநாயகர் புராணம் பகுதி-11
முதல் பக்கம் » விநாயகர் புராணம்
விநாயகர் புராணம் பகுதி-10
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 பிப்
2011
02:02

காஷ்யப முனிவருக்கு திதி, அதிதி என்ற இரண்டு பத்தினிகள். இவர்களில் திதி அசுர வம்சத்தவள். அசுரக்குழந்தைகளை அவர் மூலம் பெற்றவள். அதிதி தேவர் குலத்தினரைப் பெற்ற மகராசி. இவளது பிள்ளைகளான தேவர்களுக்கு ஒரு சமயம் பூலோகத்தில் வசித்த இரண்டு வேதியர்கள் மூலமாக கடும் பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவள் தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அங்கதேசத்தில் காத்திரம் என்ற நகரம் இருந்தது. இங்கு ரவுத்திரகேது என்பவன் தன் மனைவி சாரதாவுடன் வசித்தான். சாரதா பண்பிலும், கற்பிலும் உயர்ந்தவள். கணவனுக்கு பணிவிடை செய்வதையே தன் கடமையாகக் கொண்டவள். இந்த அன்புத்தம்பதியருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். முதலில் பிறந்தவனுக்கு தேவாந்தகன், அடுத்துப் பிறந்தவனுக்கு நராந்தகன் என்று பெயர் வைத்தார்கள். இருவரும் தந்தையை விட வேதக் கல்வியில் உயர்ந்து விளங்கினார்கள். பிள்ளைகள் கல்வியிலும் பிற வித்தைகளிலும் மிகச்சிறப்பாக இருப்பது கண்டு பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி! நிஜம் தானே! எந்தப் பெற்றவன் தான், தன் பிள்ளை நன்றாக படிப்பது கண்டு மகிழ மாட்டான். மாணவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பெற்றவர்களின் ஆசியைப் பெற வேண்டுமானால், நன்றாகப் படிக்க வேண்டும். பெற்றவர்களின் ஆசியைப் பெற்றவனுக்கு, வாழ்நாள் முழுவதும் சொர்க்கம் தான். இறைவனே அவர்களை நேரில் காண வருவான். தேவாந்தகன், நராந்தகன் வாழ்விலும் இப்படி ஒரு திருப்பம் ஏற்பட்டது. தேவாந்தகனும், நராந்தகனும், தங்கள் தந்தையிடம், தந்தையே! நாங்கள் படித்துப் பயனில்லை. கற்ற கல்வியைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்நிலையை அடைய வேண்டும். அதற்கு தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும், என்றனர். பண்டிதரான ரவுத்ரகேதுவும், பிள்ளைகளின் ஆர்வத்தைப் பார்த்து பூரித்தார்.

மக்களே! உயர்நிலை என்பது இறைவனை அடைவது தான். நீங்கள் நினைத்தால் அதைச் செய்யலாம். உங்களுக்கு சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறேன். அதை நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள். உங்களுக்கு நிச்சயம் உயர்நிலை கிடைக்கும், என்றார். பின்னர் சிவாயநம என்னும் மந்திரத்தைக் கற்றுக்கொடுத்து, அதன் பெருமையைச் சொல்லி, அதையே சொல்லிவரும்படி சொன்னார். தேவாந்தக, நராந்தகர் தந்தையின் சொற்களை மதித்து, காட்டில் போய் தவமிருந்து, சூரியனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, பத்தாயிரம் ஆண்டுகள் சிவாயநம மந்திரத்தைச் சொல்லி வந்தார்கள். இந்த பத்தாயிரம் ஆண்டுகளும் அவர்கள் தண்ணீர் கூட குடிக்கவில்லை. இவர்களது தவத்தின் வலிமை, நெருப்பாக மாறி சிவலோகத்தையே தகிக்கச் செய்தது. தன் பக்தர்களின் தவவலிமை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு வந்தார். ரிஷப வாகன தரிசனம் புண்ணியம் செய்தவர்களுக்கே கிடைக்கும். பக்திக்காக எதையும் செய்யத் துணிந்த நாயன்மார்களுக்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தான் காட்சி தந்தார். ஞானசம்பந்தர் குழந்தையாக இருந்த போது, ரிஷபத்தில் வந்ததை விடையேறி வந்தார் என சம்பந்தப்பெருமானே பாடியிருப்பதைக் காண்கிறோம். உங்கள் ஊரில் சிவாலய திருவிழாக்களில், ரிஷப வாகனத்தில் சுவாமி வந்தால், அதை தவற விடாமல் பார்த்து விடுங்கள். அந்தளவுக்கு உயரிய தரிசனம் அது. அந்த மதிப்புமிக்க தரிசனம், தேவாந்தக, நராந்தகருக்கு கிடைத்தது. அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் என சிவபெருமான் கேட்டார். இந்த நேரத்தில், விதிப்பயனால், அவர்களுக்கு ஆணவம் தலை தூக்கியது.

சிவபெருமானே! திருமால், பிரம்மா முதலான தேவர்களாலும், மிருகங்கள், ஆயுதங்கள், உலகத்திலுள்ள எல்லா வகையான பொருட்கள் உள்ளிட்ட எதனாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது. இந்த வரத்தை தாங்கள் தர வேண்டும், என்றனர். தன் பக்தர்கள் கேட்டதை தரும் இறைவனும் அவ்வாறே வரம் கொடுத்தார். மக்களே! உங்களுக்கு என் மகன் யானை முகனைத் தவிர வேறு யாராலும் அழிவு கிடையாது, என்று சொல்லி மறைந்தார். இந்த வரம் கிடைத்ததாலும், தங்கள் தவவலிமையாலும் ஆணவம் மேல் ஏற, வேதாந்தகனும், நராந்தகனும் தந்தையிடம் சென்றனர். அவர்களைப் பார்த்த தந்தைக்கும் ஆணவம் ஏற்பட்டு விட்டது.  இருவருக்கும் தன் இஷ்டம் போல, தங்கள் குலத்தில் இருந்து பல கன்னிகளைத் திருமணம் செய்து வைத்தார். மகன்களை அசுரலோகத்திற்கு அனுப்பி, அவர்களைத் தனது நண்பர்களாக்கிக் கொள்ளும்படி கூறினான். அவர்களும் அசுரலோகம் சென்று, அவர்களோடு பேசி, தன் நண்பர்களாக்கிக் கொண்டனர். எல்லாருமாகச் சேர்ந்து, தேவலோகத்தைப் பிடிக்க திட்டம் போட்டனர். இது கண்டு, காஷ்யபரின் மூத்த மனைவி திதி சந்தோஷப்பட்டாள். திட்டமிட்டபடி, அவர்கள் இந்திரலோகம் சென்றனர். தேவர்கள் அவர்களை எதிர்த்தனர். ஆனால், எதிர்த்தவர்களை பந்தாடி விட்டனர். தேவாந்தக, நராந்தகர். அவர்களையெல்லாம் பிடித்து, மாடுகளைக் கொட்டிலில் அடைப்பது போல அசுரலோகத்தின் சிறைகளில் அடைத்து விட்டனர். இது கண்டு மகிழ்ந்த அசுரர்கள், அவர்களுக்கு தங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்களை ஆசைநாயகிகளாக்கி வைத்தனர். அந்தப் பெண்கள் மூலமாக அசுர இனத்தை விருத்தி செய்தனர் தேவாந்தக, நராந்தகர். இப்படி பலம் பெற்று விளங்கிய அவர்களை அடக்க இந்திரனே நேரில் வந்தான். ஆனால், இந்திரன் ஏறி வந்த ஐராவத யானையை ஒரே அடியில் தரையில் சாய்த்து விட்டு, அவனைப் பிடிக்க முற்பட்டபோது, தேவேந்திரன் பயந்து போய் மேருமலையிலுள்ள குகைக்கு ஓடிவிட்டான். அவன் மனைவி பேரழகி இந்திராணியை அவர்கள் கடத்த முயன்றனர். அவள் எப்படியோ தப்பித்து, கணவன் பதுங்கியிருந்த மேருமலை குகைக்கே ஓடிவிட்டாள். இவர்களது அட்டூழியம் கண்டு வருந்திய தேவ மாதா அதிதி, தன் கணவரிடமே யோசனை கேட்டாள். உன் மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால், விநாயகரால் மட்டுமே முடியும். அவர் உன் வயிற்றில் பிறக்க வேண்டும் என தவம் செய். நன்மை நடக்கும், என்றார். இதற்காகத்தான், இப்போது அதிதி தவத்தைத் தொடங்கியிருக்கிறாள்.

 
மேலும் விநாயகர் புராணம் »
temple news
அடியே குடும்பினி! உன் நகைகளை எங்கே மறைத்து வைத்தாய்? நான் அதைக் கேட்பேன் என்று <உன் தாய் வீட்டுக்கு ... மேலும்
 
temple news
எமகிங்கரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ராஜாதி ராஜா! இந்த மனிதன், பூலோகத்தில் செய்யாத ... மேலும்
 
temple news
அந்த தபஸ்வியின் பெயர் சிவனன். பிருகு மகரிஷிக்கும் புலோமைக்கும் பிறந்த செல்வ புத்திரர். அவர், காட்டில் ... மேலும்
 
temple news
பிருகுவின் தவவலிமைக்கு அந்த பூதம் மதிப்பளித்து, முனிவரே! நான் ஒரு அந்தணன். முற்பிறவியில், இந்த ... மேலும்
 
temple news
அசுரேந்திரனின் மனதில் சற்றே நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன், குருவே! மரகதரைப் பற்றி கொஞ்சம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar