சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் நடைபெறுகிறது. மாசி மாத பூஜைகளுக்காக, இன்று மாலை 5:00 மணிக்கு, மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். இன்று வேறு விசேஷ பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல் பிப்., 17 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். 17-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.