திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பிப்.14 ல் 108 கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2026 02:02
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி பிப்.14ல் 108 கலசாபிேஷகம் நடைபெறுகிறது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சனி மகா பிரதோஷத்தன்று உலக நன்மை வேண்டி 108 கலசங்களுடன் சிறப்பு யாகம் நடைபெறுகிறது. கோயில் நந்தி மண்டபத்தில் காலை 10:35 மணிக்கு முதற்காலயாக பூஜை துவங்குகிறது. பூஜை நிறைவுக்குப் பின் மதியம் 12:00 மணிக்கு பூர்ணாகுதி ,தீபராதனை நடைபெறும். பின்னர் மாலை 3:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள் துவங்கும். தொடர்ந்து மகா சனிப் பிரேதாஷத்தை முன்னிட்டு மாலை 4:30 மணிக்கு நந்திதேவர்,சுவாமிக்கு சிவாச்சார்யர்களால் அபிேஷகம் நடைபெறும். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி பிரகாரங்களில் வலம் வருவார். ஏற்பாட்டை தேவஸ்தானம், பிரதோஷக் குழுவினர் செய்கின்றனர்.