Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ஏழரைச்சனி போயே போச்சு! - 75/100 கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ஆடம்பர ஆண்டு! - 65/100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஏப்
2014
06:04

சூரியனை ஆட்சி நாயகனாக கொண்டசிம்ம ராசி அன்பர்களே!

வாழ்க்கையில் எப்பொழுதும் பிரகாசமாகவே காணப்படுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில்குருபகவான் மிதுன ராசியில் உள்ளார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். ஆண்டு முழுதும் மனம் போல ஆடம்பர வாழ்வு வாழ்வீர்கள். தொழில், உத்தியோகம் சிறப்படையும். ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சிஆவதால், நன்மை குறையும். உடல் அலைச்சலும், மனதில் உளைச்சலும் உருவாகலாம்.ராகு சனி பகவானோடு இணைந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார். இதனால், ஜூன் 21 வரை நன்மை நீடிக்கும். அதன்பின் அவர் கன்னி ராசிக்குபெயர்ச்சியாவதால், பொருளாதார இழப்பும் உண்டாகலாம்.  கேது ஆண்டு தொடக்கத்தில்மேஷத்தில் உள்ளதால் முயற்சியில் தோல்வியைஏற்படுத்தலாம். ஜூன்21ல் கேது மீனத்திற்குசெல்கிறார். அதன்பின் அவரால் வந்த தடை நீங்கும்.சனிபகவான் தற்போது 3-ம் இடமான துலாமில் உள்ளார். அவர் பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தந்து கொண்டுஇருக்கிறார். டிசம்பர் 16ல் சனிபகவான் விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பானதல்ல. குடும்பத்தில் வீண் விரோதம் வளரும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பானஇடத்தில் விழுகிறது. இது மிகசாதகமான நிலையே. மேலும் தற்போது சனிபகவான் வக்கிரத்தில் இருக்கிறார். கெடுபலன் தரும்நிலையில் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்தால் நன்மையே உண்டாகும்.குடும்பத்தில் ஜூன்13க்கு பிறகு தம்பதியர் இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஆனால் அதற்காக கடன் வாங்க நேரிடலாம். ஜூன் முதல் வீட்டில் செலவு அதிகரிக்கும். ஆடம்பர செலவைத் தவிர்ப்பது நன்மை தரும். சுபவிஷயத்தில்தாமதம் உண்டாகலாம்.

தொழில், வியாபாரம்: நல்லவளர்ச்சியும், அதற்கேற்ப அதிகலாபமும் கிடைக்கும். புதிய தொழில்தொடங்கும் வாய்ப்புண்டு. அதற்கு வக்கிர காலம் உகந்ததாகஅமையும். பொதுவாகதொழிலுக்கு அதிகமாக முதலீடு செய்வதை விட புத்தியை செயல்படுத்தி அதிக வருமானம் பெறலாம். குடும்பபிரச்னையை மறந்து தொழில் செய்து வந்தால்நல்ல முன்னேற்றம் காணலாம். ஆண்டின்பிற்பகுதியில் அதிகமாக உழைக்க  வேண்டியது இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர்மாற்றும் நிலையும் உருவாகும். எதிரிகளால்இடையூறு அவ்வப்போது வரலாம். ஆனால்,எளிதில் முறியடித்து விடுவீர்கள். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.

பணியாளர்கள்:  பணியில் நல்ல முன்னேற்றம்உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவு சீராகக்கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம்கிடைக்கும். சம்பள உயர்வும் உண்டு. வேலை இன்றி இருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்கப்பெறுவர். ஜூன்13க்கு பிறகு பணிச்சுமையைச்சந்திக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம்அனுசரித்து போவது நல்லது. உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலர் வேலை நிமித்தமாக தற்காலிகமாககுடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.

கலைஞர்கள்: சிறப்பான முன்னேற்றம் காண்பர்.புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில்கலைஞர்கள் தொழிலில் கடின முயற்சி எடுக்கவேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகள்: மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். பலனை எதிர்பார்க்காமல் உழைக்கவேண்டியதிருக்கும்.மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் முதல் மாணவராகத் திகழ்வர். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.அடுத்த கல்வியாண்டில்முயற்சி எடுத்து படிக்க
வேண்டியதிருக்கும்.ஆசிரியர்  அறிவுரையைப் பின்பற்றி  நடப்பதுநல்லது.

விவசாயிகள்: உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். நெல், கோதுமை, கடலை,எள் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு வழக்கு விவகாரத்தில் சாதக பலன் கிடைக்காது. புதிய வழக்குஎதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்: உற்சாகமாக வாழ்வில் ஈடுபடுவர். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர். விருந்து,விழா என சென்று வருவீர்கள். உறவினர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.உடல் நலம் சுமாராக இருக்கும்.உஷ்ணம், தோல், தொடர்பானநோய் உண்டாகலாம்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar