Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 கடகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025.. நல்லகாலம் வந்தாச்சு கடகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025.. ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
01:04

மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்

சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களில் (ரிஷபம்) பிறந்தவர்களுக்கு மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் குரோதி ஆண்டு 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். செயலில் வேகத்துடன் விவேகமும் தோன்றும். வெளிநாட்டுத் தொடர்புகளால் லாபம் ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பும் முயற்சியும் தேவைப்படும். விரயச்செலவு அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். எதிர்ப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும்.சமூகத்தில் உயர்வு உண்டாகும். தொட்டதெல்லாம் வெற்றியாகும்.

சனி சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன் வழங்குவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024, ஜூன் 19 - நவ.3 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 அஸ்தமன காலத்திலும் நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நினைத்ததை நடத்தி முடித்துக் கொள்ள முடியும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்ய சனியால் முயற்சிகள் எல்லாம் லாபமாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும்.

ராகு, கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். திரைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பலவழியிலும் வரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் ஏற்படும்.  இழந்த சொத்து, செல்வாக்கை அடையும் நிலை ஏற்படும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், செலவுகளை அதிகரித்தாலும் செல்வாக்கை உயர்த்துவார். விருப்பத்தை நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். சுபநிகழ்ச்சியை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கை தருவார். மே 1 முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பவர் பார்வைகளின் வழியே அதிர்ஷ்ட பலன்களைத் தருவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என அனைத்திலும் முன்னேற்றம் தருவார்.  

சூரிய சஞ்சாரம்
மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு 2024, ஜூலை 17 - ஆக. 16, அக். 18 - நவ 15, 2025, 2025, பிப். 13 - ஏப். 13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, 2024, ஏப். 14 - மே. 13, ஆக. 17 - செப் 16,  நவ. 16 - டிச 15, 2025, 2025, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சங்கடங்களை போக்கி பிரகாசமான நிலையை ஏற்படுத்துவார். பிரச்னைகளை எல்லாம் விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வை ஏற்படுத்துவார். வழக்குகளில் நல்ல முடிவைத் தருவார். அரசு வழி முயற்சியில் ஆதாயத்தை ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்
குரோதி யோகமான ஆண்டாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபத்தில் செல்லும். பொருளாதாரம் உயரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

தொழில்
இயந்திர தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, நவீன சாதனங்கள் உற்பத்தி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், விவசாயம் செய்வோருக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்கள், கலைஞர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வளர்ச்சி காண்பர்.

பணியாளர்கள்
வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப நன்மை உண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். நெருக்கடி தீரும்.

பெண்கள்
குடும்பத்தினரின் அரவணைப்பால் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகை கிடைக்கும்.

கல்வி
பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் நினைத்த பாடப்பிரிவும் கிடைக்கும்.

உடல்நிலை
உடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். நீண்டநாட்களாக நோய்கள் விலகி முன்னேற்றம் தோன்றும். பரம்பரை, தொற்று நோய்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இயற்கை வைத்தியத்தால் குறையும்.

குடும்பம்
வருமானத்தில் இருந்த தடை விலகும். பணம் பல வழிகளிலும் வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். நினைத்ததைச் செய்து முடித்து ஆதாயம் காண முடியும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் அமையும்.

பரிகாரம்: நடராஜரை வழிபட்டால் சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.


திருவாதிரை: தொழில் வளர்ச்சி

வித்யாகாரகனான புதன், யோககாரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கப் போகும் குரோதி ஆண்டில் கடந்த கால சங்கடம் விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் நீங்கும். அரசியலில் உங்கள் மதிப்பு உயரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கும், வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கும் விருப்பம் நிறைவேறும். களவு போன பொருள் கிடைக்கும். இழந்த செல்வாக்கு மீண்டும் உயரும்.

சனி சஞ்சாரம்
உங்களுக்கு பாக்யாதிபதியான சனி, பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் துணிச்சல் அதிகரிக்கும். உடலில் இருந்த பாதிப்பு விலகி முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். எதிரி தொல்லை விலகும். செல்வாக்கு உயரும்.

ராகு, கேது சஞ்சாரம்
தொழில் ஸ்தானத்தில் ராகுவும், சுக ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகள் லாபம் தரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் வரும். வணிகத்தில் தடை விலகி வளர்ச்சி ஏற்படும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்க்கை வளமாகும். மே.1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் 4,6,8 ஆகிய இடங்களில் பதிவதால் உடல்நிலை பாதிப்பு நீங்கும். மனதில் இருந்த பயம் போகும். நீங்கள் எதிர்பார்த்தவற்றை அடைவீர்கள். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். வழக்குகளில் வெற்றியுண்டாகும். எதிர்ப்புகள் விலகி, அந்தஸ்து உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

சூரிய சஞ்சாரம்
2024, ஆக. 17  - செப் 16,  நவ. 16 -  டிச 15, 2025, 2025 மார்ச் 15 - மே 13 காலங்களில் ராசிக்கு 3,6,10,11ம்னபல் சஞ்சரிக்கும் சூரிய பகவான், சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். அரசு வழியில் மேற்கொள்ளும் செயல்களில் லாபம் தருவார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். எதிரி தொல்லையை இல்லாமல் செய்வார். அலுவலகத்தில் உண்டான பிரச்னைகளை முடித்து வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வழி அமைப்பார். லாபத்தை அதிகரிப்பார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்
ஒன்பதாமிட சனி, குருவின் பார்வைகள், 120 நாட்கள் சூரியனால் நன்மை, மே. 31 -  ஜூலை. 10 வரை செவ்வாயால் ஆதாயம் என்று இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். திட்டமிட்ட செயல்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். வழக்குகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும்.  சொத்து சேர்க்கை ஏற்படும். நவீன உபகரணம், புதிய வாகனம் வாங்குவீர்கள்.

தொழில்
தொழிலில் வளர்ச்சி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். சிலர் தொழிலை விரிவுபடுத்துவர். புதிய தொழிலில் தொடங்குவீர்கள். விவசாயம், பால், தண்ணீர், கனரக வாகன உற்பத்தி, இயந்திர உற்பத்தி, பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, பங்கு வர்த்தகம், சின்னத்திரை,  மருத்துவம், ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் லாபம் உயரும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உழைப்பிற்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு என எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
சாதுர்யமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நீண்டநாள் கனவு நிறைவேறும். அரசுப்பணியில் சேர முயற்சித்தவர்க்கு வெற்றி உண்டாகும். சுயதொழிலில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். விரும்பிய பொருளை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.

கல்வி
பொதுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் பங்கேற்றோர் எதிர்ப்பார்த்த மதிப்பெண் பெறுவர். படிப்பு மீது அக்கறை உண்டாகும். மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும்.

உடல்நிலை
உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். உடல்நிலை சீராகும். இனம் புரியாத நோய்களால் அவதிப்பட்ட நிலை மாறும். சிகிச்சையால் குணம் பெறுவதுடன் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடம் மாறத் தொடங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினருடன் இணக்கம் உண்டாகும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது என விருப்பங்கள்  நிறைவேறும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்கள் வாங்குவீர்கள். நிதிநிலை உயரும்.  குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

பரிகாரம்: சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.


புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சு

தனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் 3 பாதங்களில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு வித்யாகாரகன் புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு (கடகம்) மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் குரோதி ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றியும், எதிர்பார்த்த வருமானமும் கிடைக்கும். எதிரி தொல்லை விலகும். வெளிநாடு செல்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். விரும்பிய யாவும் வந்து சேரும். தகுதிக்கேற்ற பொறுப்பு, பதவி உயர்வு ஏற்படும். பிறரால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி, தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன் தருவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியெல்லாம் லாபம் என்ற நிலை உண்டாகும். விருப்பம் நிறைவேறும். 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி கைகூடும்.  புதிய தொழில் மூலம் லாபம் காண்பீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 4ம் பாதத்தினருக்கு 2024, ஜூன் 19 - நவ. 4 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29  அஸ்தமன காலத்திலும் நெருக்கடி விலகும். ஆரோக்கியம் சீராகும்.  வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.

ராகு, கேது சஞ்சாரம்
 ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம் லாபகரமாக இருக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சகோதரர், பணியாளர்கள் ஒத்துழைப்பர்.  

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப குருவால்  வருமானம் உயரும். முன்னேற்றம் ஏற்படும். மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு கூடும். அலைச்சல் உண்டாகும். கடன் அதிகரிக்கும். ஆனால் உடல்நிலை சீராகும். வம்பு, வழக்குகள் தீரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொழிலில் மந்தநிலை ஏற்படும். வருமானத்தில் தடை, பணியில் பிரச்னை உருவாகும்.  மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு கூடும். செல்வாக்கு உயரும். தொழில், குடும்பம், உத்தியோகத்தில் யோகமும் அளிப்பார். திருமண யோகம், குழந்தை பாக்கியத்தை தருவார். வேலைக்காக முயற்சித்தவர்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறுவர்.

சூரிய சஞ்சாரம்
புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024, ஏப்.14 - மே13, ஆக.17 - செப். 16, நவ. 16 - டிச. 15, 2025 மார்ச் 15 - ஏப்.13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2024, ஏப்.14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச. 16 - 2025, ஜன. 15 காலத்திலும் செல்வாக்கை உயர்த்துவார். தனித்திறனை வெளிப்படுத்துவார். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியருக்கு விரும்பிய இடமாற்றம், பணி உயர்வு கிடைக்கும்.


பொதுப்பலன்
நெருக்கடி நீங்கும். முயற்சியில் வெற்றி, கடன் பிரச்னை தீரும். வேலையில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில்
மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள், ஏற்றுமதி, இறக்குமதி, திரைப்படம், சின்னத்திரை, இயந்திரத் தொழிற்சாலை, வியாபார நிறுவனம், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், பத்திர எழுத்தாளர், கதாசிரியர்கள், பத்திரிகையாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

பணியாளர்கள்
திறமைக்கு மதிப்பில்லை, என்ன தான் உழைத்தாலும் உயர்வில்லை என வருத்தப்பட்டு வந்த நிலை இனி மாறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும்.

பெண்கள்
வேலைக்காக முயற்சித்தவர்களின் செயல் வெற்றியாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்புகள் விலகும். கணவர், குடும்பத்தினரின் பாராட்டை பெறுவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். உயர்கல்வி கனவு நிறைவேறும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளி நாட்டுக்குச் செல்வர்.

உடல்நிலை
உடல்பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். விபத்து, நோய் என படுக்கையில் இருந்தவர்கள் சிகிச்சையால் எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத்திணறல், நரம்புப் பிரச்னை ஏற்பட்டு குணமாகும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். சொத்து சேர்க்கை உண்டாகும்.சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளின் திருமணத்தை நடத்துவீர்கள். புதிய வாகனம், வீடு என நீண்டநாள் கனவு நிறைவேறும். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர்.

பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவனை தரிசிக்க நல்வாழ்வு அமையும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
உத்திரம்: பணப்புழக்கம் கூடும் ஆற்றல்காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 1 ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar