Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு 2024 - 2025 மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
01:04

கார்த்திகை: யோகமான காலம்

ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் (மேஷம்) பிறந்தவர்களுக்கு பூமிக்காரகனான செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (ரிஷபம்) மனக்காரகனான சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
புத்தாண்டான குரோதி ஆண்டு கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபம், அதிர்ஷ்டத்தை தரும். முயற்சி யாவிலும் வெற்றியைத் தரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு குலதெய்வ அருள், திருமண வயதினருக்கு திருமண யோகம், புதிய தொழில் தொடங்கும் நிலை, பணியில் முன்னேற்றம், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை வாய்ப்பை அளிக்கும்.  
சனி சஞ்சாரம்
கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியுமான சனி ஆண்டு முழுவதும் யோகப் பலன் வழங்குவார். தொழில், வேலையில்  இருந்த நெருக்கடி நீங்கும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.

ராகு, கேது சஞ்சாரம்
1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் செல்வாக்கு உயரும். சங்கடம் விலகும். விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகுவால் அந்நியர் வழியே ஆதாயம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். பொருளாதாரம், செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30 வரை 1ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12 லும்,  மே 1 முதல் 1 ம் பாதத்தினருக்கு 2 லும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கிறார் குருபகவான். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் பொருளாதார முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். முயற்சியில் வெற்றியை தருவார். புகழுக்குரியவராக மாற்றுவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் திருமண யோகத்தை தருவார். செல்வாக்கை அதிகரிப்பார். சமூக அந்தஸ்தை உயர்த்துவார்.

சூரிய சஞ்சாரம்
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு 2024, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2025, ஜன. 14 - மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 2024, ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ.15, 2025, பிப்.13 - ஏப்.13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றம் தருவார். சங்கடத்தில் இருந்து விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மையை வழங்குவார். வம்பு வழக்குகளில் இருந்து விடுவித்து செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவியை வழங்குவார். அரசு ஊழியர்களின் மதிப்பை அதிகரிப்பார். எதிரி தொல்லையில் இருந்து விடுவிப்பார். ஆரோக்கியம் அளிப்பார். அரசு வகையில் ஆதாயம் தருவார்.

பொதுப்பலன்
தொழில், உத்தியோகம், குடும்பம், வாழ்க்கையில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தீரும். எதிர்பார்க்கும் உதவி சரியான நேரத்தில் வரும். தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும்.

தொழில்
தொழிலில் பிரச்னைகள் விலகும். எதிர்பார்க்கும் வருமானம் உண்டாகும். புதிய முயற்சிகள்  எளிதாக வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இன்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, யூடியூப், சின்னத்திரை, பங்குவர்த்தகம், நிதிநிறுவனம், ஜூவல்லரி தொழில்கள் கை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி தீரும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும். இக்காலத்தில் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்கள்
வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும். சிலர் படிப்பிற்காக குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்வீர்கள்.

உடல்நிலை
நீண்ட நாள் நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். சிலருக்கு இயற்கை வைத்தியம் கை கொடுக்கும். உற்சாகமாக செயல்படும் அளவிற்கு உடல்நிலை சீராகும். உணவு, உறக்கத்தில் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.

குடும்பம்
உற்சாகமுடன் செயல்பட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வர மனநிம்மதி உண்டாகும்.


ரோகிணி;வருமானம் உயரும்

மனக்காரகனான சந்திரன், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த நீங்கள், பிறக்கும் குரோதி ஆண்டில் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். குலதெய்வ அருளால் தடைகள் விலகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். வியாபாரிகள் புதிய கிளை தொடங்குவர். வருமானத்திற்காக குடும்பம் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என வாழும் நிலை ஏற்படும். வருமானம் பல வழிகளிலும் வரும்.  வெளிநாட்டு வர்த்தகம் ஆதாயம் தரும். முதலீட்டாளர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். மாற்று மொழி, இனத்தினரால் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தேடிவரும். உடல்நிலையில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றும்.

சனி சஞ்சாரம்
ஜீவனாதிபதியான சனி தொழில் ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம், பணியில் உயர்வு. வேலைத் தேடுவோருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்றாலும், சனி நீதிமான் என்பதால் தங்கள் அதிகாரத்தை வைத்து தவறாக சம்பாதிப்பவர்களுக்கு தண்டனை வழங்குவார் என்பதை மறவாதீர்கள். நேர்மையுடன் நடந்தால் கவுரவம், அந்தஸ்து, செல்வாக்கு உண்டாகும். தொழிலில் அக்கறையுடன் செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.  உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பட்டம், பதவி தேடி வரும்.

ராகு, கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் ராகு லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணியத்திலும் சஞ்சரிக்கின்றனர். ராகுவால் வாழ்வு வளமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் பல வழியில் வரும்.  பணியில் இருந்த பிரச்னைகள் தீரும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி அல்லது பொறுப்பு வந்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். கேதுவால் குலதெய்வ அருள் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை விரய ஸ்தானத்தில் உள்ள குருவின் பார்வைகளால் ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து அலைச்சலை அதிகரித்தாலும், புதிய சொத்து சேரும். குலதெய்வ அருளால் குறைகள் தீரும். பணியாளர்களுக்கு நிரந்தர வேலை அமையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளை உயர்கல்விக்கான முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.

சூரிய சஞ்சாரம்
2024, ஜூலை 17  - ஆக. 16, அக். 18 -  நவ. 15, 2025, பிப். 13 - ஏப். 13 காலங்களில் தைரிய, சத்ரு, ஜீவன, லாப ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் சூரியன் தொழிலில் ஆதாயத்தை உண்டாக்குவார்.  உத்தியோகத்தில் உயர்வை ஏற்படுத்துவார்.  பணத்தடைகளை விலக்குவார். தைரியமாக செயல்பட வைப்பார். முயற்சிகளில் வெற்றி அடையச் செய்வார். அரசு வழியில் சங்கடங்களை நீக்குவார். கோரிக்கையை நிறைவேற்றுவார். வழக்குகளில் சாதகம் தருவார். அந்தஸ்தை உயர்த்துவார். எதிரிகளை விலகிச் செல்ல வைப்பார்.

பொதுப்பலன்
தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்க்கும் லாபம் வரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். வருமானம் பல வழிகளில் வரும். தொழில் தொடங்க நினைப்பவர்களின் முயற்சி பலிதமாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சொத்து சேரும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். கவுரவம் மேம்படும். பணியில் ஏற்பட்ட பிரச்னை, வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

தொழில்
நெருக்கடி, தடைகள் நீங்கும். ஆதாயம் ஏற்படும். உங்கள் முயற்சி லாபமாகும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இயந்திரத் தொழிற்சாலை, மின்சார சாதனங்கள் தயாரிப்பு, சர்வீஸ் சென்டர். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், திரைப்படம், சின்னத்திரை, விவசாயம் போன்றவற்றில் எதிர்பார்க்கும் ஆதாயம் ஏற்படும்.

பணியாளர்கள்
தனியார் நிறுவன ஊழியர்களின் மனக்குறை விலகும். மதிப்பு, ஊதியம் உயரும். அரசு ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விரும்பிய இடத்திற்கு மாற்றம், கூடுதல் பொறுப்பு கிடைக்கும். வழக்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் மீண்டும் வேலை பெறுவர். வரவேண்டிய பணம் வரும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும்.

பெண்கள்
மேற்கல்வி கனவு நனவாகும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். கல்வி, வேலை என வெளிநாடு செல்வதற்கு முயற்சிப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் தீரும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் குறை தீரும். சுயதொழில் செய்பவர்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சி காண்பர். அலுவலகப்பணியில் கூடுதல் பொறுப்பு உண்டாகும். பிள்ளைகளின் மீதிருந்த கவலை நீங்கும். நிம்மதி உண்டாகும்.

கல்வி
பொதுத் தேர்வு, போட்டித் தேர்வில் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலருக்கு மேலை நாட்டிற்கு அல்லது வெளி மாநிலத்திற்கு சென்று கல்வி கற்கும் நிலை ஏற்படும்.

உடல்நிலை
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்பு தோன்றும் என்றாலும் அவை மருத்துவத்தால் சரியாகும். அஜீரணக் கோளாறு, அல்சர், வாயுத்தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு பாரம்பரிய வைத்திய முறையால் குணமுண்டாகும். சிலர் தொற்று நோய்க்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் பழக்க வழக்கங்களில் எச்சரிக்கை தேவை.

குடும்பம்
முன்னேற்றம் உண்டாகும். தேவைக்கேற்ப வரவுகள் வந்துசேரும். நெருக்கடி தீரும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து செயல்படுவீர்கள். சொத்து, வாகனச் சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குலதெய்வ அருள் உண்டாகும். வேலைத்தேடுவோருக்கு தகுதியான வேலை அமையும். தாமதித்த திருமணம் இக்காலத்தில் நடைபெறும். தகுதியான வரன் அமையும். புத்திர பாக்கியம் உண்டாகும்.

பரிகாரம்: குருபகவானுக்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட வாழ்வு வளமாகும்.


மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்

சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களில் (ரிஷபம்) பிறந்தவர்களுக்கு மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் குரோதி ஆண்டு 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். செயலில் வேகத்துடன் விவேகமும் தோன்றும். வெளிநாட்டுத் தொடர்புகளால் லாபம் ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பும் முயற்சியும் தேவைப்படும். விரயச்செலவு அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். எதிர்ப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும்.சமூகத்தில் உயர்வு உண்டாகும். தொட்டதெல்லாம் வெற்றியாகும்.

சனி சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன் வழங்குவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024, ஜூன் 19 - நவ.3 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 அஸ்தமன காலத்திலும் நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நினைத்ததை நடத்தி முடித்துக் கொள்ள முடியும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்ய சனியால் முயற்சிகள் எல்லாம் லாபமாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும்.

ராகு, கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். திரைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பலவழியிலும் வரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் ஏற்படும்.  இழந்த சொத்து, செல்வாக்கை அடையும் நிலை ஏற்படும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், செலவுகளை அதிகரித்தாலும் செல்வாக்கை உயர்த்துவார். விருப்பத்தை நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். சுபநிகழ்ச்சியை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கை தருவார். மே 1 முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பவர் பார்வைகளின் வழியே அதிர்ஷ்ட பலன்களைத் தருவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என அனைத்திலும் முன்னேற்றம் தருவார்.  

சூரிய சஞ்சாரம்
மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு 2024, ஜூலை 17 - ஆக. 16, அக். 18 - நவ 15, 2025, 2025, பிப். 13 - ஏப். 13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, 2024, ஏப். 14 - மே. 13, ஆக. 17 - செப் 16,  நவ. 16 - டிச 15, 2025, 2025, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சங்கடங்களை போக்கி பிரகாசமான நிலையை ஏற்படுத்துவார். பிரச்னைகளை எல்லாம் விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வை ஏற்படுத்துவார். வழக்குகளில் நல்ல முடிவைத் தருவார். அரசு வழி முயற்சியில் ஆதாயத்தை ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்
குரோதி யோகமான ஆண்டாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபத்தில் செல்லும். பொருளாதாரம் உயரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

தொழில்
இயந்திர தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, நவீன சாதனங்கள் உற்பத்தி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், விவசாயம் செய்வோருக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்கள், கலைஞர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வளர்ச்சி காண்பர்.

பணியாளர்கள்
வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப நன்மை உண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். நெருக்கடி தீரும்.

பெண்கள்
குடும்பத்தினரின் அரவணைப்பால் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகை கிடைக்கும்.

கல்வி
பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் நினைத்த பாடப்பிரிவும் கிடைக்கும்.

உடல்நிலை
உடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். நீண்டநாட்களாக நோய்கள் விலகி முன்னேற்றம் தோன்றும். பரம்பரை, தொற்று நோய்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இயற்கை வைத்தியத்தால் குறையும்.

குடும்பம்
வருமானத்தில் இருந்த தடை விலகும். பணம் பல வழிகளிலும் வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். நினைத்ததைச் செய்து முடித்து ஆதாயம் காண முடியும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் அமையும்.

பரிகாரம்: நடராஜரை வழிபட்டால் சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
உத்திரம்: பணப்புழக்கம் கூடும் ஆற்றல்காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 1 ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar