ருத்ராட்சங்களின் முகம்தான் அதன் மகிமையைச் சொல்வது. ஏக முகம் என்பது பிரும்மஸ்வரூபம். இரண்டு முகம், மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம், ஆறு முகம் என்று வரிசையாக முகங்களுக்கு ஏற்றவாறு அந்தந்த தேவதைகளைச் சொல்லிக் கொண்டு வரும்போது, இரண்டு ருத்ராட்சம் சேர்ந்து இருப்பது, கவுரி சங்கரம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பேரிலேயே இருக்கிறதே கவுரி, சங்கரம் என்று! கவுரி என்றால் அம்பாள், சங்கரம் என்றால் சிவபெருமான். இருவரும் சேர்ந்து இருக்கும் ருத்ராட்சமாக இருப்பதனால், ருத்ராட்சங்களில் இது மிகவும் உயர்வானதாகச் சொல்லப்படுவது ஒரு முகமும், கவுரி சங்கரமும்தான்! அது கிடைப்பது மிகவும் அபூர்வம்.