நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2017 11:06
திருநெல்வேலி: திருநெல்வேலி: நெல்லைப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும் ஜூலை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் ஆனிப்பெருந்திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேரும் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் ஆனித்தேரோட்டம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலை சிறபபு அபிசேகம், வீதியுலா நடக்கிறது .10ம் திருவிழா ஜூலை 7ம் தேதியன்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் வலம் வரும் வைபவம் நடக்கிறது. தினமும் மாலையில் கோயில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.