Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் ... பச்சை நிற கற்கோவில் திருமால்பூரின் பொக்கிஷம்!: தொல்லியல் துறை தூக்கம் பச்சை நிற கற்கோவில் திருமால்பூரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
11:06

திருப்பூர் : சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான, திருவாசகம் அருளிய மாணிக்கவாசகரின் குருபூஜை, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்றது. சிவ பக்தரான மாணிக்கவாசகர், எட்டாம் நுõற்றாண்டில், திருவாதவூரில் பிறந்தவர். பாண்டிய மன்னர் அரிமர்த்தன பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்தவர். குரு சீடர் பக்தி நெறி உடையவர். ஆவியும், உடலும், உடைமை எல்லாமும், இறைவன் திரு வடிக்கே என வாழ்ந்தவர். நமச்சிவாயா வாழ்க;  நாதன் தாழ் வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க என்று பாடியவர். மன்னருக்காக குதிரைகள் வாங்க சென்றவர், குரு வடிவாக காட்சியளித்த சிவபெருமானின் திருவடி பணிந்தார். மன்னர் குதிரைகளை கேட்க, இறைவன் திருவிளையாடலால், நரி பரியாகி, அரசவைக்கு வந்து, மீண்டும் நரியானது. வைகை ஆற்று மணலில்  தண்டனை கொடுக்கப்பட்ட மாணிக்கவாசகரை காப்பாற்ற, வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தினான் இறைவன். பிட்டுக்கு மண் சுமந்தது என, மாணிக்கவாசகருக்காக இறைவன் திருவிளையாடல் புரிந்தார். அவரது குரு பூஜை விழா, நேற்று திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நடைபெற்றது. விஸ்வேஸ்வரர் கோவிலில்,  அர்த்தசாம பூசை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடந்த பூஜையில், மாணிக்கவாசகர் உள்ளிட்ட நால்வருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதேபோல், அவிநாசிலிங்ககேஸ்வரர் மற்றும் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலிலும், மாணிக்கவாசகர் குரு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, சந்திர சேகரர், கருணாம்பிகை அம்மனுடன், மாணிக்கவாசகர் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.  இதில், ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar