துவாரகையில் கிருஷ்ணபரமாத்மா, ‘துவாரகாநாத்ஜி’ என்ற பெயரில் மூலவராகக் காட்சிதருகிறார். இந்த கோயிலில் கிருஷ்ணரின் தாயார் தேவகிக்கும், கிருஷ்ணரின் எட்டு மனைவியருக்கும் தனிச்சன்னதி உள்ளது. மாமியாரும் மருமகளும் நிறைந்த இந்த சன்னதி தொகுதியை கிருஷ்ணரின் அந்தப்புரம் என்று அழைக்கிறார்கள்.