பதிவு செய்த நாள்
29
நவ
2019
01:11
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு வார நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், விடுமுறை நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகளை, 40 நாட்களுக்கு ஒருமுறை எண்ணுவது வழக்கம். நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தன. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் ஹரிஹரன் தலைமையில், கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள், சேவா சங்கத்தினர் ஆகியோர் உண்டியலில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர்.கோவில் வளாகத்தில் வைத்திருந்த, 20 உண்டியல்கள், தட்டு காணிக்கை உண்டியல் இரண்ட என, மொத்தம், 22 உண்டியல்களில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில், கோவில் உண்டியல்களில், 16 லட்சத்து, 64 ஆயிரத்து, 532 ரூபாயும், தட்டு காணிக்கை உண்டியல்களில், 4 லட்சத்து, 85 ஆயிரத்து, 229 ரூபாயும் இருந்தது.