காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2026 03:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி பிரம்மோத்சவம் விமரிசையாக துவங்கியது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவ துவக்க நாளான இன்று அதிகாலை 3:00 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு வேதவிற்பன்னர்கள் மந்திரங்களை ஓதியபடி, பல்வேறு சிறப்பு பூஜை செய்தனர். அதை தொடர்ந்து, கருடாழ்வார் படம் இடம்பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் வீதியுலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான 14ம் தேதி காலை 7:00 மணிக்கு கருடசேவை உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான தேரோட்டம் வரும் 18ம் தேதி காலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது. 20ம் தேதி காலை தீர்த்தவாரியும், மார்ச் 22ம் தேதி புஷ்ப பல்லக்குடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.