Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊட்டி முத்து மாரியம்மன் கோவிலில் ... தெப்பக்குளம் மாரியம்மன் உற்சவ விழா தெப்பக்குளம் மாரியம்மன் உற்சவ விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆறு உருப்படிகள்: சிருங்கேரி மடம் வழங்கியது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2012
10:04

கன்னியாகுமரி : சிருங்கேரி மடம் சார்பில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட ஆறு உருப்படிகள் வழங்கப்பட்டது. சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் குமரி மாவட்டம் வந்தார்.நாகர்கோவில் வடிவீஸ்வரம் பள்ளத்தெரு சிருங்கேரி மடத்தில் அவருக்கு பூர்ணகும்ப வரவேற்பு, தூளிபாத பூஜை, நன்மடல் சமர்ப்பணம் அளிக்கப்பட்டது.அதை ஏற்றுக்கொண்ட சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார்.பின்னர் ஸ்ரீ சாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான நேற்று காலை பூஜை, ஜகத்மகா சுவாமிகளின் தரிசனம், பழ,புஷ்ப சமர்ப்பணம், பாத பூஜைகள், தீர்த்த பிரசாதம், மந்த்ராக்ஷதை பிரசாதம் ஆகியவை நடந்தது. அறநிலையத்துறை சார்பில் இணை கமிஷனர் ஞானசேகர் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் சுவாமிகளை சந்தித்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மற்றும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு அழைப்பு விடுத்தனர்.இதனையடுத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சிருங்கேரி மடம் தலைமை நிர்வாக அதிகாரி கவுரிசங்கர், சிருங்கேரிமடம் பொறியாளர் பத்மநாபன், ஸ்தபதி செல்வராஜ், நெல்லை சிருங்கேரி மடம் ஒருங்கிணைப்பாளர் காசி விஸ்வநாதன், சிஷ்யர் பரமேஸ்வரன் ஆகியோர் நேற்று காலை வந்தனர்.அங்கு சிருங்கேரி மடம் சார்பில் அம்மனுக்கு அணிவிக்க 12 கிலோ எடை கொண்ட செப்பு தகட்டில் தங்கமுலாம் பூசபட்ட முகம், தலைகிரீடம், மார்பகம், திருக்கால், திருக்கை, பீடம் ஆகிய ஆறு உருப்படிகளை ஒரு தட்டில் வைத்து கோயிலுக்கு கொண்டுவந்து கோயிலை வலம் வந்தனர்.பின்னர் அவற்றை கோயில் மேலாளர் சோணாசலம், கணக்காளர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவற்றை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட ஆறு உருப்படிகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar