ஊத்துக்காடு:பெரியாண்டவர் கோவிலில், நாளை 15ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், அங்காளபரமேஸ்வரி உடனுறை பெரியாண் டவர் கோவில் உள்ளது.
பராமரிப்பின்றி காணப்பட்ட இக்கோவிலில், திருப்பணிகள் நடந்து வந்தன. இப்பணிகள் முடிந்து, நாளை காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் மரக லக்னத்தில் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. இத்தகவலை, கோவில் நிர்வாகம் தெரிவித்து, பக்தர்கள் அனைவரையும் வரவேற்றுள்ளனர்.