காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் மார்கழி இசை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2019 02:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் கலையரங்கில், இரண்டாம் ஆண்டு மார்கழி இசை கொண்டாட்டம், நாளை 15ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு, மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை நடைபெறும். இசை கொண்டாட்டத்தில், காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான்களின் கடம், வீணை உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளும் மற்றும் பிரபல நடன பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.