Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆழிமழைக்கண்ணா! ஒன்றும் நீ கைகரவேல்...! மார்கழி பஜனை: சிறுவர்கள் பக்தி பரவசம் மார்கழி பஜனை: சிறுவர்கள் பக்தி ...
முதல் பக்கம் » செய்திகள்
மார்கழி 5ம் நாள் வழிபாடு :‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...
எழுத்தின் அளவு:
மார்கழி 5ம் நாள் வழிபாடு :‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...

பதிவு செய்த நாள்

20 டிச
2019
01:12

கோவை பெரிய கடைவீதியிலுள்ள, லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் (கெரடி கோவில்), நாளை காலை 5:00 மணிக்கு, ஆண்டாள் அருளிய திருப்பாவையின், ஐந்தாம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.ஆதியும் அந்தமுமாய் காட்சியளிக்கும், லட்சுமி நாராயண வேணுகோபாலசுவாமியை வழிபட்டால், தசாவதாரங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.ஸ்ரீரங்கத்தை போன்று தெற்கு திசையில், சுவாமி காட்சியளிக்கிறார்.

அங்குள்ளதை போல் இங்கேயும், உற்சவர் கஸ்துாரிரங்கன் தவிர லட்சுமிநாராயணன், வேணுகோபாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு மூலவர்கள் அருள்பாலிக்கின்றனர். பக்தர்களுக்கு பாவவிமோசனத்தை வழங்கி, மோட்சத்தை கொடுக்கும் ஸ்தலம்.மார்கழி மாதத்தையொட்டி இக்கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு திருப்பாவையின் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை... என்று துவங்கும் பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்பெரும் மாயச்செயல்களை செய்பவன் கண்ணன். வடமதுரையில் அவதரித்த தலைவன். துாயநீர் நிறைந்த யமுனை ஆற்றின் தீரத்தில் தோன்றியவன். ஆயர்குல மக்கள் வாழும் கோகுலத்தில் வளர்ந்த ஒளிபொருந்திய அழகன். தன் பிறப்பால் தன்னை பெற்ற தாய்க்கு பெருமையும் மேன்மையும் அளித்தவன்.அப்படிப்பட்ட கோகுலக்கண்ணனை, துாய மனமுடையவராய் வந்து மணமிகுந்த மலர்களை துாவி, வாயார பாடி, நெஞ்சார நினைத்து வணங்கினால், நாம் முன்னர் அறியாது செய்த பாவங்களும், இனி நமக்கு வர இருக்கும் பாவங்களும், தீயிலிட்ட பஞ்சு போல தீய்ந்து அழிந்து போகும். அதனால் எம்பெருமானது திருநாமங்களை சொல்லுவோமாக என்பதே இப்பாடலின் பொருள்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar