பார்வையற்ற ஒருவன் விளக்கை எடுத்துக்கொண்டு நடந்து போனான். எதிரே வந்தவன், உனக்கு கண் தெரியாதே -எதற்கு விளக்கு? என்று கேட்டான். உனக்குக் கண் இருக்கிறதல்லவா, நீ என்மேல் விழாமல் இருப்பதற்குத்தான் விளக்கு என்றான் அவன். யாருக்கு கண் இருக்கிறதோ அவனுக்கு அது உபயோகப்படுகிறது. நம்முடைய மதங்களுக்கெல்லாம் மூலமான வேதத்தை -நாம் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் வரப்போகிற இளைய தலைமுறையினருக்காகவாவது உபயோகப்படட்டும் என்று நாம் காப்பாற்றியாக வேண்டும்.