மானாமதுரை: தமிழகத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் திருப்பள்ளி எழுதல், பள்ளி யறை பூஜை, சுவாமி வீதிவுலா மற்றும் பல்வேறு பூஜைகளின் போது சிவனடியார்கள். மற்றும் திருத்தொண்டு செய்பவர்கள் கைலாய வாத்தியம் எனும் இசைக்கருவிகளை வாசித்து இறைவனுக்கு தொண்டாற்றினர்.
காலப்போக்கில் இந்த வாத்திய கருவிகள் மெல்ல, மெல்ல மறைந்ததை அடுத்து தற்போது மேள, தாளங்கள், மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற செண்டை மேளம் ஏராளமான கோயில் களில் வாசித்து வருகின்றனர். எனினும் மானாமதுரையில் புகழ்பெற்ற ஆனந்தவல்லி சோமாநாதர் கோயிலில் கைலாய வாததிய இசைக்கருவிகளை சிவனடியார் சிவமணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து சொந்த செலவில் வாங்கி தற்போது அதனை வாசித்து வருகின்றனர்.
சிவனடியார் செந்தில் 41, கூறுகையில், மானாமதுரையில் உள்ள சோமநாதர் கோயில் சந்திரனுக்கே பாவ விமோசனம் அளித்த திருத்தலம் என்பதால் இங்கு பாரம்பரிய இசையை இசைக்க வேண்டி சிவனடியார்கள் பலர் ஒன்று சேர்ந்து தற்போது இந்த இசைக்கருவிகளை வாசித்து வருகிறோம். மேலும் கோயிலில் நடைபெறும் சித்திரை, ஆடி திருவிழாக்களின் பொது 10 நாட்கள் தினந்தோறும் இரவு சுவாமி வீதிவுலா வரும்போது இந்த இசைக்கருவி களை வாசித்து கொண்டே முன்னே செல்லும் போது பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறிய இறைத்தொண்டு செய்வதின் மூலம் உடலுக்கும், மனதுக்கும் திருப்தியாக உள்ளது என்றார்.