பதிவு செய்த நாள்
28
டிச
2019
12:12
சென்னை : திருப்படி திருவிழாவையொட்டி, அரக்கோணம் - திருத்தணி இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருத்தணி முருகன் கோவிலில், நாளை மறுநாள், (டிசம்., 29, 30ல்)திருப்படி திருவிழா நடக்கிறது. திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, அரக்கோணத்தில் இருந்து, நாளை மறுநாள் மற்றும் ஜன., 1ம் தேதிகளில், இரவு, 10:10 மணி மற்றும் 11:20 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், இரவு, 10:30 மணி மற்றும் இரவு, 11:40 மணிக்கு, திருத்தணி சென்றடையும். திருத் தணியில் இருந்து இரவு, 10:40 மணி மற்றும் 11:50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், இரவு, 11:00 மணி மற்றும் இரவு, 12:10 மணிக்கு, அரக்கோணம் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.