மதுரை : சாய் விருக் ஷா சார்பில் புத்தாண்டையொட்டி மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ’ஆன்மிக அலங்காரம்’ நிகழ்ச்சி டிச., 31 ல் நடக்கிறது.
இதையொட்டி மாலை 5:30 மணிக்கு, ’ஆன்மிகக் கருத்துக்களை பெரிதும் தருவது ராமாயணமே! மகாபாரதமே!’ என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜாராம் குழுவினரின் ஆன்மிக பட்டிமன்றம் நடக்கிறது. கார்த்திக் ஞானேஷ்வரன் குழுவினரின், ’நாம சங்கீர்த்தனம்,’ இசை அலங்காரம், மதுரை லயக்ஷேத்ரா வழங்கும், ’ஆடும் அழகன் கண்ணன்’ நடன-நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கும். பங்கேற்போருக்கு பிரசாதம் வழங்கப்படும். அனுமதி இலவசம். முன்பதிவிற்கு 99942 32874ல் தொடர்பு கொள்ளலாம்.