பதிவு செய்த நாள்
28
டிச
2019
01:12
கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, பூச்சாட்டுத லுடன் தொடங்கியது. ஈரோடு மாவட்டம், கோபி அருகில் உள்ள, பிரசித்த பெற்ற கோவிலான பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, ஆகம விதிப்படி நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
இதையடுத்து பக்தர்கள் விரதம் கடைப்பிடிக்க துவங்கியுள்ளனர். பூச்சாட்டுதலை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பாரியூர் கோவிலில் நேற்று 27ல் காலை முதல் குவிந்தனர். பெண் பக்தர்கள், குண்டத்தில் தீபமேற்றி வழிபட்டுனர்.
முக்கிய நிகழ்வாக, 2020 ஜன., 6ல், சந்தனக்காப்பு அலங்காரம், ஜன.,9ல் பக்தர்கள் பூமிதிக்கும் திருக்குண்டம் நடக்கிறது. இதையடுத்து, ஜன.,10ல் தேரோட்டம், 11ல், மலர் பல்லக்கு உற்ச வம், 18ல் மறுபூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.