Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முப்பத்து மூவர் அமரர்க்கு.. மார்கழி ... ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்.. மார்கழி 25ம் நாள் வழிபாடு ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்.. ...
முதல் பக்கம் » செய்திகள்
அன்று இவ்வுலகம் அளந்தாய்.. மார்கழி 24ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
அன்று இவ்வுலகம் அளந்தாய்.. மார்கழி 24ம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள்

08 ஜன
2020
01:01

கோவை: சிறுவாணி சாலை, சென்னனுாரில் அமைந்துள்ள ராதாகிருஷ்ணர் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, திருப்பாவையின் 24ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர். கோவிலின் சிறப்புராதாகிருஷ்ணர் கோவில் நுாற்றாண்டு பழமையானது.

முன்பு நாமசங்கீர்த்தன மண்டபமாக இருந்தது. பின்னர் கோவிலாக கட்டப்பட்டது. ஆண்டு முழுக்க ஒவ்வொரு சனிக்கிழமையும், முக்கிய நாட்களில், நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு இசை கற்பவர்களும், இசையை முதன் முதலாக துவக்குபவர்களும் ஏராளம்.மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை அதிகாலையில், அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி... என்று துவங்கும் திருப்பாவை பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்எம்பெருமானே, வாமன அவதாரத்தில் மகாபலிக்கு, மோட்சம் தர ஈரடியில் மூவுலகும் அளந்த உன் திருப்பாதங்கள் பல்லாண்டு வாழ்வதாக. ராம அவதாரத்தில் சினத்தினால் தென்னிலங்கை சென்று ராவணனை பூண்டோடு அழித்த உன் வலிமை பல்லாண்டு வாழ்வதாக. கிருஷ்ண அவதாரத்தில் வண்டி உருவமாக வந்த சகடாசுரனை உதைத்து அழித்த, உன் புகழ் பல்லாண்டு வாழ்வதாக.கன்றின் வடிவமாய் உன்னை அழிக்க வந்தவனை, விளாமர வடிவமாய் நின்றிருந்த அசுரன் மேல் வீசி எறிந்து, இருவரையும் அழித்த உன் கைகள், பல்லாண்டு வாழ்வதாக.இந்திரனது கோபத்தால் பெய்த மழையில், பசுக்கூட்டங்களை காக்க கோவர்த்தன மலையை குடையாய் எடுத்த உன் வலிமை பல்லாண்டு வாழ்வதாக.இப்படி உன் வீரத்தை எல்லாம் புகழ்ந்து பாடும் எளிய பெண்களுக்கு, நீ பறை என்ற அருளை தருவாய் என்கின்றனர் பெண்கள் என்பதே பாடலின் பொருள்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar