பதிவு செய்த நாள்
16
ஜன
2020
03:01
கோவை: ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், 75 பானைகளில் பொங்கலிட்டு, கோவை சிங்காநல்லுார் மக்கள், சமத்துவ பொங்கல் விழா நடத்தினர்.
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லெமன் ஸ்பூன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர், சிலம்பாட்டம், மினி ஓட்டம், மியூசிக்கல் சேர், உறியடித்தல், கயிறு இழுக்கும் போட்டி, சாக்கு ஓட்டம், சிலம்பாட்டம், இளைஞர்களுக்கு கபடி, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்டம் முழுவதும் நேற்று சமத்துவ பொங்கல்கொண்டாடப்பட்டது.
சிங்காநல்லுார் பகுதி கழக செயலாளர் சாமி தலைமையில் நடந்த விழாவில், தப்பாட்டம் முழங்க, 75 மண் பானைகளில், சிங்காநல்லுார், நீலிக்கோனாம்பாளையம், ஒண்டிபுதுார் பெண்கள் பொங்கலிட்டனர்.அவர்களுக்கு, பட்டுச்சேலை, ஜாக்கெட் துணி, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பாசிப்பயறு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மூன்று துண்டு கரும்பு, மஞ்சள், வாழைக்கன்று, அடுப்பு, மண் சட்டி, மண் பானை, கரண்டி இலவசமாக வழங்கப்பட்டன.