பதிவு செய்த நாள்
17
ஜன
2020
10:01
திருச்சி: நம்மாழ்வார் மோட்சம் வைபவத்துடன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா, டிச., 26ல், திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பகல் பத்து நிகழ்ச்சிகள், 27ல் துவங்கி, 5ம் தேதி வரை நடந்தன. வைகுண்ட ஏகாதசி விழாவின், முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு, 6ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, ராப்பத்து நடந்தன. வைகுண்ட ஏகாதசியின் நிறைவு நாளான நேற்று அதிகாலை, நம்மாழ்வார் மோட்சம் வைபவம் நடந்தது. நேற்று மதியம், 2:00 மணிக்கு நம்பெருமாள் கனு புறப்பாடாகி, ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தார். பின், இரவு, 8:00 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, பாரிவேட்டை கண்டருளி, மீண்டும், இரவு, 9:45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் வந்தடைந்தார். 21 நாட்களாக நடந்த வைகுண்ட ஏகாதசி விழா, சிறப்பான முறையில் நிறைவு பெற்றது.