பதிவு செய்த நாள்
17
ஜன
2020
10:01
திருப்போரூர்:திருப்போரூரில், பொங்கல் பால் குட விழாவில், பக்தர்கள் மழையில், கந்தசுவாமி கோவில் குலுங்கியது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பால் குட விழா, கந்தன் வழிபாட்டு மன்றத்தினர் மூலம் நடத்தப்படுகிறது.அந்த வகையில், இந்தாண்டு, 29ம் ஆண்டு பால்குட விழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் கந்தசுவாமி கோவில், சரவண பொய்கையை ஒட்டிய காவடி மண்டபத்திலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி, மாடவீதியுடன் கிரிவலம் வந்தனர்.பால் குடங்களுடன் அலகு குத்தி, காவடி அணிவகுப்பும் நடந்தது. பகல், 12:30 மணியளவில் பக்தர்கள் கந்தசுவாமி கோவிலில் வந்தடைந்தனர்.கந்தசுவாமி கோவில் உற்சவருக்கு பால் குடங்களால் பாலாபிஷேகம் நடந்தது.