சிவகாசி: சிவகாசி ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் ஸ்ரீதேவி பூதேவி வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை மாலையில் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.