வெளியே புறப்படும் போது, ’ஜாக்கிரதையாகப் போய் வா’ என பெற்றோர் எச்சரிக்கை செய்வர். ஆன்மிக வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை விஷயங்கள் உள்ளன. * மனதை ஜாக்கிரதையாய் காத்துக் கொள். * கற்பனைகளை எல்லாம் கைக்கொள்ள ஜாக்கிரதையாய் இருங்கள். அதாவது நீங்கள் நினைப்பதை செயல்படுத்த முயற்சிக்கும் போது விழிப்புடன் செயல்படுங்கள். * ஜாக்கிரதை உள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும். (முன் எச்சரிக்கை உள்ளவன் தலைவனாக இருப்பான்) * ஜாக்கிரதை உள்ளவர்களுடைய ஆத்துமா புஷ்டியாகும். (எச்சரிக்கை கொண்டவனின் மனம் பலமானதாக இருக்கும்) * ஜாக்கிரதை உள்ளவனுடைய நினைவுகள் (திட்டங்கள்) செல்வத்தை அடைய துணை நிற்கும். * தன் வேலையில் ஜாக்கிரதையாய் இருக்கிறவன் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். (அரசிடம் பரிசு பெறுவான்)