குளக்கரையில் நின்றிருந்த ஒருவரின் மீது எருமை மாடு ஒன்று உரசிச் சென்றது. அவரது ஆடையின் மீது சேறு படிந்தது. அப்போது ஆடை கறையாகி விட்டதே என வேகமாக சுத்தம் செய்தார். இது போல காமம், கோபம் போன்ற தீய பிசாசுகள் உரசுவதால் நம் மனதிலும் கறை படிகிறது. அதனால் பாவங்களை செய்து விட்டோமோ என்ற பயமும் ஏற்படுகிறது. இதற்கு ஆண்டவரிடம் முறையிட்டால் மனதில் கறை படியால் நம்மை துாய்மைப்படுத்துவார்.