சோழவந்தான்:சோழவந்தான் அருகே கோவில் குருவித்துறையில் ஆதிமாசாணி அம்மன் கோயில் விழா ஜன., 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக மயான பூஜை, சக்தி கரகம், பூக்குழி உற்ஸவம் நடந்தன. பின் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். மகாமுனீஷ்வரர், கருப்புசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர், கிராமத்தினர் செய்தனர்.