திண்டிவனம்:திண்டிவனத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பில், நடந்த விளக்கு பூஜையில், திண்டிவனம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு, அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்த மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.கோவிலின் தலைவர் குப்புசாமி மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஜனார்த்தனன், பச்சையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.