Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தியாகராஜர் ஜெயந்தியை முன்னிட்டு ... ஆற்றில் இறங்க அழகர் வரும் வழியில் ஆக்கிரமிப்புகள்! ஆற்றில் இறங்க அழகர் வரும் வழியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலையில் சூறாவளியுடன் கனமழை: பக்தர்கள் செல்ல தடை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஏப்
2012
10:04

உடுமலை : உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் நேற்று, சூறாவளி காற்றுடன் தொடர் மழை பெய்ததால், சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நடை சாத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உடுமலை அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், திருமூர்த்தி மலை உள்ளது. மலை அடிவாரத்தில் மும்மூர்த்திகள் குடி கொண்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும், பஞ்சலிங்க அருவியும் அமைந்துள்ளன. படகுத்துறை, வண்ணமீன் காட்சியகம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளதால், அதிக அளவு சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக மழையில்லாததால், பஞ்சலிங்க அருவி வறண்டு பாறையாக காணப்பட்டது. நேற்று மதியம், 1 மணிக்கு சூறாவளி காற்றுடன், கன மழை பெய்யத் துவங்கியது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழையால்; மலைப்பகுதியில், சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் பஞ்சலிங்க அருவிக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது. போலீசாரும், கோவில் பணியாளர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: தொடர் மழையால், வெண்டையாறு, வண்டியாறு, கொட்டையாறு, பாறைப்பட்டியாறு, குருமலையாறு, உளுவியாறு, கிழவிப்பட்டி வழியாக பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பலத்த மழை காரணமாக, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, அருவிக்கு செல்ல பக்தர்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் அழகேசன் அறிவுரைப்படி, கோவில் நடை சாத்தப்பட்டது; உண்டியலுக்குள் மழை நீர் புகாமல் தடுக்க பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையில் நின்று இறைவனை தரிசிக்க அமைக்கப்பட்ட வரிசை கம்பிகளும், தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன. கண்காணிப்புப் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar