Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பாளை உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதை வேதாரணீஸ்வரர் கோவிலில் திருமணக்கோலம்: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2012
11:04

வேதாரண்யம்: வேதாரணீயஸ்வரர் கோவிலில் சிவன், பார்வதி திருமணக்கோலத்தில் காட்சியளிக்கும் ஐதீக பெருவிழா வெகு விமர்சையாக நடந்தது. வேதாரண்யம் வேதாரணீஸ்வரர் கோவில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இது ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் முழங்கிய ஸ்தலமாகும். திருக்கயிலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதனால், உலகினை சமப்படுத்தி மக்களை காத்தருள, அகஸ்தியரை சிவபெருமான் பணித்தார். இதற்கு அம்மை, அப்பன் திருமணத்தை காணும் பாக்கியத்தை தானும் காண அருள்பாலிக்க வேண்டும் என்றார் அகஸ்தியர். இதைத்தொடர்ந்து அகஸ்திய முனிவரும் காணும் வகையில், எங்கிருந்து உலகை சமன் செய்கிறாயோ, அவ்விடத்தில் திருமணக்கோல காட்சியளிப்பதாக கூறி சிவபெருமான் அருளினார். இதன்படி வேதாரண்யத்தில் அகஸ்தியர் இருந்தபோது சிவபெருமான் தம்பதி சமேதரராக திருமண கோலத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஆண்டுதோறும் சித்திரை மாத சப்தமி திதியில் நடந்து வருகிறது. வேதாரணீஸ்வரர் கோவிலில் சிவபெருமாள், பார்வதி திருமண கோலக்காட்சி அகஸ்தியருக்கு அருளும் ஐதீக திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி திருமண கோலத்திலுள்ள வேதாரணீயஸ்வரருக்கு சப்தமி திதியில் அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதில், ஸ்வாமியின் திருமேனிக்கு சந்தனம் அரைத்து பூசப்பட்டது. இந்த அலங்காரம், அடுத்தாண்டு திருமணக்கோல காட்சி நடக்கும் நாள் வரையிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வேதாரணீஸ்வரர் திருக்கல்யாண காட்சியில் ஸ்வாமி சன்னிதி முன்பு, சிவபெருமான், பார்வதி, பெருமாள், பூமாதேவி அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். மேற்கண்ட திருமண கோலக்காட்சியை காண, அகஸ்தியர் ஸ்வாமி சன்னிதி முன்பு, எழுந்தருளினார். பின்னர் அகஸ்தியருக்கு, கோவில் அர்ச்சகர் பரிவட்டம் கட்டி, தீபாராதனை நடத்தினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டனர். திருமண காட்சியை காண வந்த பெண்களுக்கு வெற்றிலைத்தாம்பூலம், தாலிக்கயிறு, குங்குமம் போன்ற பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar