Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ... ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தனேந்தல் கருப்பணசாமி கோயில் மாசிக்களரியில் உருண்டைச் சோறு பிரசாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2020
01:03

காரியாபட்டி: காரியாபட்டி பந்தநேந்தல் வடக்குத்தெரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கருப்பணசாமி கோயில் மாசிகளரி ஆண்டுதோறும் கடைசி வெள்ளியன்று திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அன்று நள்ளிரவு 2மணிக்கு ஆண்களால் சமைக்கப்பட்டு,ஆண்கள் மட்டுமே வழிபட்டு, பூஜை செய்து உருண்டைச் சோறு பிரசாதமாக வழங்கப்படும் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தங்கியிருக்கும் இவ்வூர் பங்காளிகள் தவறாது கலந்துகொள்வர். இத்திருவிழா நேற்று முன்தினம் அக்கிராமத்தில் நடைபெற்ற போது பங்காளிகள் கூறியதாவது: உருண்டைச் சோறு பிரசாதமாக 150 ஆண்டுகளாக தொன்றுதொட்டு வழங்கப்படுவதற்கு காரணம் உண்டு. சதுரகிரி மலையில் உருவாகி, குண்டாற்றில் கலந்து வரும் நீரில் மூலிகை கலந்து இருக்கும். ஆற்றில் ஊற்று தோண்டி அதில் கிடைக்கும் நீரில் சமைத்து உருண்டை பிடித்து பிரசாதமாக வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட பிரசாதத்தை உண்டவர்களுக்கு எந்த விதமான நோயும் அண்டவில்லை. எடுத்துக்காட்டாக, ஒருசமயம் இப்பகுதியில் காலரா நோய் தீவிரமாக பரவியது. மக்கள் பயந்து செய்வதறியாது திகைத்தனர். இந்நிலையில்தான் கருப்பணசாமியிடம் வேண்டிக்கிட்ட பூசாரி ராமசாமி, சாமியாடி கீரித்தேவர், நான்கு பக்கமும் எல்லை கோடு வரைந்து விபூதி தெளித்து வைரஸ் நோய் பரவ விடாமல் தடுத்தார்கள் என முன்னோர்கள் தெரிவித்தனர். நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள். இன்றைய நாகரீக காலத்தில் முன்னோர்கள் சொல்லிவைத்த நம்பிக்கையை இன்றளவும் பின்பற்றி வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆண்கள் அனைவரும் இந்த கோவிலில் உருண்டைச் சோறு பிரசாதமாக பெற்று, கருப்பசாமியின் அருளைப்பெற பங்காளிகள் நம்பிக்கையுடன் வந்துள்ளனர். பச்சரிசியில் தயார் செய்யப்படும் உருண்டைச் சோறு கறி குழம்புடன் சேர்த்து சாப்பிட்டாலும் காரமாக இருப்பதில்லை. சாப்பிடும் போது யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இது கருப்பணசாமியின் அருள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆச்சாரம், அனுஷ்டானம் என்பதெல்லாம் வேடிக்கை அல்ல. உண்மைகள் இருப்பதால் முன்னோர்கள் மறைமுகமான விஷயத்தை நமக்கு உணர்த்தி விட்டுச் சென்றனர். நோயில் இருந்து காத்து, கருப்பசாமியின் அருளைப்பெற வேண்டும் என்பதே வடக்குத்தெரு பங்காளிகளின் விருப்பம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் 48-ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar