Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ... கொரோனாவை விரட்ட ஒப்பாரி வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை
எழுத்தின் அளவு:
திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை

பதிவு செய்த நாள்

06 ஏப்
2020
01:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிதிருவரங்கம் எனப்போற்றப்படும் திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் இதிகாச காலத்தில் உருவான பழமையான கோவிலாகும். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், பூஜைகள் நடந்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்து பட்டாச்சாரியார்கள் கோவிலை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலை திறந்தபோது தாயார் சன்னதியில் இருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, கோவிலின் வெளிப்பிரகார மதில் சுவற்றில் கயிறு கட்டி உள்ளே இறங்கிய இரண்டு கொள்ளையர்கள், தாயார் சன்னதியில் இருந்த உண்டியலை இரும்பு கம்பியால் உடைத்து பணத்தை அள்ளிச் சென்றது கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சமீபத்தில்தான் உண்டியல் திறக்கப்பட்டது என்பதால் 25 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணம் இருந்திருக்கக்கூடும் என கோவில் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு மிகுந்த ஒரு பழமையான கோவிலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar