Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோவில்களில் அன்னதான திட்டம் ... சென்னை ராமகிருஷ்ண மடம் சார்பில் கொரானா நிவாரண சேவை சென்னை ராமகிருஷ்ண மடம் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நகரத்தார் பாதயாத்திரை ரத்து
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நகரத்தார் பாதயாத்திரை ரத்து

பதிவு செய்த நாள்

22 ஏப்
2020
12:04

மயிலாடுதுறை: கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு நகரத்தார் பாதயாத்திரை வருவது ரத்தானது.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரப்பாடல் பெற்ற அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் புகழ்பெற்ற செல்வ முத்துக்குமார சுவாமி, நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். சிறப்புமிக்க இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் சிவகங்கை, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள்

சித்திரை இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை அன்று வந்து கோவில் தீர்த்த குளத்தில் நீராடி, அருள்மிகு தையல்நாயகி அம்பாளை குலதெய்வமாகவும், தங்களது ஊர் பெண்ணாகவும் கொண்டாடி சீர் வரிசையுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். நகரத்தார் வருகையால் சித்திரை 2ஆம் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் கடந்த மாதம் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மேலும் வைரஸ் பரவலை தடுக்க கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டதால் நகரத்தாரின் பாதயாத்திரை ரத்தானது. இதனால் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையான நேற்று வைதீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள நான்கு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது; பக்தர்கள், ... மேலும்
 
temple news
நத்தம்: -நத்தம் காந்தி நகர் மலையாளத்து கருப்பு சுவாமி, மந்தையம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar