Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா வைரஸ் விரட்ட சித்ரகுப்தர் ... மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தார் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடக்குமா?
எழுத்தின் அளவு:
திருப்பூரில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடக்குமா?

பதிவு செய்த நாள்

08 மே
2020
04:05

திருப்பூர்: ஊரடங்கு வாபஸ் பெறப்படும்பட்சத்தில், திருப்பூரில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடக்குமா என, பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அலுவலகங்களை திறக்கலாம் என, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இருப்பினும், மொத்த பணியாளர்களில், 33 சதவீதம் நபர்களை கொண்டு, வழக்கமான நிர்வாக பணிகளை தொடரலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு அமலாவதற்கு முன்னதாகவே, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன; கோவில் அலுவலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், நேற்று முதல், கோவில் அலுவலகங்கள், 33 சதவீத பணியாளருடன் இயங்க துவங்கியுள்ளன.கொரோனா குணமாகி, ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படும்பட்சத்தில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடக்குமா என, பக்தர்கள் காத்திருக்கின்றனர். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, விமரிசையாக நடக்கும். அதன்படி, வரும் வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடக்க இறையருள் கிடைக்குமா என, பக்தர்கள் காத்திருக்கின்றனர். இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷிடம் கேட்ட போது, ஊரடங்கு உத்தரவால், கோவில்களில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தினப்படி பூஜைகள் மட்டும் நடக்கிறது. தரிசனத்துக்கும் அனுமதியில்லை. அரசு தரப்பில் இருந்து மறு உத்தரவு வரும் வரை, கோவில் விழாக்கள் நடைபெற வாய்ப்பில்லை, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar