Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அரும்பாவூர் சிற்பத்திற்கு புவிசார் ... ரம்ஜான் சிந்தனைகள் -19: அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் ரம்ஜான் சிந்தனைகள் -19: அனைவரிடமும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முழுத் தோற்றத்தில் காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவில்
எழுத்தின் அளவு:
முழுத் தோற்றத்தில் காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவில்

பதிவு செய்த நாள்

13 மே
2020
11:05

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் கட்டப்பட்டிருந்த சாரம் அகற்றப்பட்டதால், தற்போது கோபுரங்களை முழுத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

உலகப் பாரம்பரிய சின்னமாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் தஞ்சாவூர் பெரியகோவிலில் பிப். 5ம் தேதி கும்பாபிஷே விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, இக்கோவிலில் உள்ள கேரளாந்தகன் வாயில் கோபுரம், ராஜராஜன் வாயில் கோபுரம், விமானம் (பெரிய கோபுரம்), அம்மன் சன்னதி கோபுரம் உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்களில் சாரம் கட்டப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கும்பாபிஷேக விழாவுக்கு பிறகும், கோபுரங்களில் கட்டப்பட்ட சாரம் தொடர்ந்து இருந்தது. இதனால், கோபுரத்தின் அழகை மக்களால் முழுமையாகப் பார்த்து ரசிக்க முடியவில்லை. மேலும், தொலைவிலிருந்து பார்த்தாலும், சாரம் கட்டப்பட்டிருந்ததால், கருப்பு நிறத்தில் காணப்பட்டது. இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மற்ற கோவில்கள் மூடப்பட்டதை போல, இக்கோவிலும் கடந்த மார்ச் 18ம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக சாரத்தை அகற்றுவதற்கும் தொழிலாளர்கள் வரவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் வந்ததால், கோபுரங்களில் இருந்த சாரம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சாரம் முழுமையாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பெரியகோவில் கோபுரங்களின் அழகை முழுமையாகக் காண முடிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar