Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வழிபாட்டு தலங்களை திறக்க ... முழுத் தோற்றத்தில் காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவில் முழுத் தோற்றத்தில் காட்சியளிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரும்பாவூர் சிற்பத்திற்கு புவிசார் குறியீடு
எழுத்தின் அளவு:
அரும்பாவூர் சிற்பத்திற்கு புவிசார் குறியீடு

பதிவு செய்த நாள்

13 மே
2020
10:05

தஞ்சாவூர்: தஞ்சை நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, 1,000 ஆண்டுகள் பழமையானது. இந்த நெட்டி செடிகள், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, நீர்நிலைகளில் விளையும்.

இதன் நடுப் பாகம் தாமரை தண்டு போல நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். இதை உலர்த்தி, பதப்படுத்தி, தஞ்சாவூர் பெரிய கோவில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை போன்ற மாதிரிகள் செய்து விற்கப்படுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதன் வெண்மை வண்ணம் மாறாமல் இருக்கும்.அரும்பாவூர் மரச்சிற்பம் பெரம்பலுார், அரும்பாவூர் மரச்சிற்பத்துக்கு, 250 ஆண்டு வரலாறு உள்ளது. தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், வடபழநி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்களின் தேர்கள், இவ்வூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்டன.அத்துடன், 1 அடி முதல், 12 அடி வரையிலான பல வகையான சிற்பங்களும் செய்யப்படுகின்றன. வெளிநாட்டினரால் இந்த மரச்சிற்பங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன.

இயந்திரம் இல்லாமல், உளி, சுத்தியல் உபகரணங்கள் பயன்படுத்தி, சிற்பங்கள் செய்யப்படுவது தான் இதன் தனிச்சிறப்பு.விண்ணப்பம்தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில், 2013ல், இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பிக்கபட்டது. தஞ்சை வக்கீல் சஞ்சய் காந்தியின் சட்டப்படியான முயற்சிகளால், இரு பொருட்களுக்கும், தற்போது, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதற்கான உத்தரவு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar