Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரம்ஜான் சிந்தனைகள் -24: ஆசையைக் ... விபூதி அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் அருள்பாலிப்பு விபூதி அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுக்கடைகளில் முடிகிறது கோவில்களில் முடியாதா?
எழுத்தின் அளவு:
மதுக்கடைகளில் முடிகிறது கோவில்களில் முடியாதா?

பதிவு செய்த நாள்

18 மே
2020
10:05

 சமூக இடைவெளியை, மது வாங்குவோரே பின் பற்றும் போது, பக்தர்களாலும் முடியும். எனவே, கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, அரசுக்கு ஆன்மிகவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும், கோவில்களில் நடக்க இருந்த விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் பெரும் வருத்தமடைந்தனர்.அவர்களுக்கு ஆறுதலாக, முக்கிய கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் மட்டும், ஆன்-லைன் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

தற்போது, ஊரடங்கின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.சமீபத்தில், குடிமகன்கள் வசதிக்காக, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, தினமும் 500 பேருக்கு, சமூக இடைவெளியுடன், மது பானங்கள் விற்பனை செய்ய, அரசு அனுமதி அளித்து உள்ளது.இந்நிலையில், கோவில்களிலும், சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, ஆன்மிகவாதிகள் தரப்பில் கூறியதாவது:குடிமகன்கள் விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை,பக்தர்கள் விஷயத்திலும், அரசு காட்ட வேண்டும். டாஸ்மாக் போலவே, கோவில்களிலும் காணிக்கை, நன்கொடை வாயிலாக, வருமானம் வருகிறது என்பதை, மறந்து விடக் கூடாது.டாஸ்மாக்கில்டோக்கன் முறையில், மது பானங்கள் வழங்குவது போல, கோவில்களிலும், டோக்கன் முறையில், தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் .குடிமகன்களே சமூக இடைவெளியை கடைபிடிக்கும்போது, பக்தர்கள் கடைபிடிக்க மாட்டார்களா! எனவே, கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-நமது நிருபர் --

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar