பதிவு செய்த நாள்
11
மே
2012
11:05
மதுரை: சிருங்கேரி சாரதா பீடத்தின் 36வது பீடாதிபதி பாரதீதீர்த்த சுவாமி விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மே14 முதல் 30 வரை விஜயயாத்திரை மேற்கொள்கிறார். ஆதிசங்கரரால் 1200 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகா சிருங்கேரியில் சாரதாபீடம் உருவாக்கப்பட்டது. இதன் 36வது பீடாதிபதி பாரதீதீர்த்த சுவாமி, 16 ஆண்டுகளுக்குப் பின், விஜய யாத்திரையாக தமிழகம் வந்துள்ளார்.மே 14,15 காலை ராஜபாளையம் ராமமந்திரத்திலும், 16ல் அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் வளாகத்திலும்,17ல் ராமநாதபுரம் அரண்மனையிலும், 18,19ல் ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்திலும், 20ல் சிவகங்கை ராஜா அண்ணாமலை மண்டபத்திலும், 21ல் கொடிமங்கலம் சீதாலட்சுமி அம்மன் கோயிலிலும் தரிசனம் தருகிறார். மே 22முதல் 30வரை மதுரை பைபாஸ் ரோட்டிலுள்ள சிருங்கேரி சங்கரமடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். சுவாமி தங்குமிடங்களில் தினமும் காலை 10-12 மணி வரை தரிசனம் தருவார். இரவு 8.30மணிக்கு சந்திரமவுலீஸ்வரர் ஸ்படிக லிங்கம், ரத்னகர்ப்ப கணபதிக்கு பூஜை செய்கிறார். ராமநாதபுரம் பகுதி பக்தர்கள் 94431 68916, ராமேஸ்வரம் பகுதி பக்தர்கள் 94435 02607, சிவகங்கை பக்தர்கள் 98424 41346, கொடிமங்கலம் பக்தர்கள் 98417 32003 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.