Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைரலாகிறது முருகனை துதித்து ... ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷிக்கு அழைப்பு ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு
எழுத்தின் அளவு:
தஞ்சையில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2020
03:07

 சென்னை : -மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டை, அடுத்த ஆண்டு தஞ்சையில் நடத்த, தமிழ்த் தாய் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, அதன் நிறுவனர், உடையார்கோவில் குணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு, மலேஷியாவின் கோலாலம்பூர், இந்த ஆண்டு, இலங்கையின் யாழ்ப்பாணத்தில், இரண்டு உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்தியுள்ளோம்.அடுத்தாண்டு, பிப், 26, 27, 28 ஆகிய நாட்களில், தஞ்சையில், மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதை, தமிழக அரசின் கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், கல்லுாரிகளுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக, 3 அடி- உயரம், 750 கிலோ திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி, ஸ்ரீ கிருஷ்ணா சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்படுகிறது. இது, தமிழகம் முழுதும் அலங்கார ஊர்தியில், 10 நாட்கள் ஊர்வலமாக செல்லப்படும்.பின், அது, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கல்வி நிறுவனம், தமிழ்ச் சங்க அமைப்பு ஆகிய ஏதேனும் ஒன்றில் நிறுவ அன்பளிப்பாக வழங்கப்படும்.திருக்குறளின் சிறப்புகள், அரிய தகவல்கள், நெறிகள், அரிய பணிகளை தொகுத்து, சிறப்பு மலர் வெளியிட உள்ளோம்.

இதற்கு, அறிஞர்கள், ஆய்வுக் கட்டுரைகளை, kuralmanadu21tnj@gmail.com மற்றும் thamilthaitrust@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழார்வலர்கள் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு, 75300 02454, 94439 38797 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar