Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உயிர்காக்கும் கந்த சஷ்டி கவசத்தை ... தஞ்சையில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு தஞ்சையில் மூன்றாவது உலகத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு
எழுத்தின் அளவு:
வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2020
03:07

சென்னை : கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், முருகனை துதித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைலராகி வருகிறது.

தலைசிறந்த அரசியல் ஆளுமை, சிறந்த நடிகை என்பதையும் தாண்டி, அருமையாக பாட்டும் பாடும் திறமை படைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அம்மா என்றால் அன்பு.... (படம்: அடிமைப்பெண்), ஓ மேரி தில்ருபா... (படம்: சூரியகாந்தி), சித்ர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்... (படம்: அன்பைத் தேடி), இரு மாங்கனி போல் இதழ் ஓரம்.... (படம்: வைரம்) போன்ற பாடல்களை தன் குரலில் கொடுத்துள்ளார். இவர் பாடிய சினிமா பாடல்கள் கூட பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பலரும் அறிந்திராத ஒன்று அவர் பக்தி பாடல்களும் பாடியிருக்கிறார்.

சினிமாவில் அவர் பிரபலமாக இருந்த காலத்தில் மறைந்த வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் அம்மா என்றால் அன்பு என்ற ஆல்பத்தில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார் ஜெயலலிதா. தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன்... எனும் முருகன் பாடலையும், மாறி வரும் உலகினிலே மாறாத மாரியம்மா... எனும் அம்மன் பாடலையும் பாடியிருக்கிறார். இந்த பாடல்களில் முருகன் பாட்டை தவசீலனும், அம்மன் பாட்டை பூவை செங்குட்டுவனும் எழுதி உள்ளனர்.

உலகமே கொரோனாவல் தவித்து வர இந்த நேரத்தில் கூட இந்துக்களையும், இந்து மத கடவுள்களையும் அவதூறு செய்து வருகிறது கருப்பர் எனும் கூட்டம். சமீபத்தில் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை பழித்து இவர்கள் பதிவிட்ட வீடியோ, இந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அன்று ஜெயலலிதா பாடிய, தங்க மயில் ஏறி வரும் எங்கள் வேலன்... என்ற பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar